தமிழா தமிழா.....
தங்லிஸ் என்ற பெயரில் தமிழ் மொழியின் மானத்தை
காற்றில் பறக்க விடும் ஒரு சில மனிதர்களை பற்றி பேசுவதற்கு கூட தமிழன் என்ற
முறையிலே நான் வருத்தப்படுகின்றேன்,
“தமிழன்
என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”
என்ற தமிழனின் சிறப்பை நிகழ்காலங்களில்
பார்ப்பது என்பதே அரிதான ஒன்றாக மாறிவிட்டது,ஒரு தமிழனாக,தமிழை பேசுவதற்கு கூட
அவனுக்கு நேரம் இல்லை.இன்று ஒவ்வொரு தமிழனும் சாயம் பூசப்பட்ட மட்பா ண்டங்கலாக
தான் இருகின்றான்,தன்னுடைய இயற்கை நிறத்தை மறந்து விட்டு,பிழைப்புக்கு மாற்று
வண்ணம்பூசிக்கொண்டு திரிகின்றான்.
மாற்று வண்ணம் பூசிக்கொண்டால் மாத்திரம் நீ
தமிழன் இல்லை என்று கூறிவிட முடியுமா என்ன?
உன்னுடைய செயல்கள் வேண்டுமானால்
ஆங்கிலத்தில் இருக்கலாம் ,உன்னுடைய சிந்தனைகள் என்றுமே தமிழில் தான் இருக்கும்,
சிந்திப்பதற்காய் மட்டும் உன்னுடைய தாய்
மொழியாம் தமிழை உபயோகப்படுத்தாதே,உன்னுடைய செயல்களிலும்
செயல்படுத்தி,பயன்படுத்து...
அதோடு
ஆங்கிலம் கற்பது நல்லது தான்,ஆங்கிலத்தை
கற்க வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை,முதலில் தமிழுக்கு முதலிடம் கொடுத்து
பராமரிக்க வேண்டும் என்று தான் நான் சொல்கின்றேன்.
உலகின் அனைத்து கண்டுபிடிப்புகளும் தாய்
மொழியில் நிகழ்த்தப்பட்ட ஒன்று தான்,தாழ்மொழி கல்வியில் மட்டுமே நாம் தரம் உயர்த்த
படுவோம்,தமிழ் படிப்போம்,தமிழ் வளர்ப்போம்,தமிழ் காப்போம்.....
(தொடர்ந்து அடுத்த பதிவுகளில் நம்
தாழ்மொழியாம் தமிழை பற்றி காண்போம்)
என்றும் மக்கட் பணியில் கலாம்பாக்கம்
க.வினோத் குமார் (பயிற்சி வழக்கறிஞர்,உயர் நீதி மன்றம் சென்னை)....
No comments:
Post a Comment