Saturday, February 14, 2015

பெண்களுக்கு எதிரான வன்முறை.



பெண்களுக்கு எதிரான வன்முறை


உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. பெண்களின் வன்முறைக்கு எதிரான தினம் உருவாகிய வரலாறு மிகவும் கசப்பான ஒரு நிகழ்வாகும்.
 
டொமினிக்கன் குடியரசில் Dominican Republic, 1960 நவம்பர் 25 இல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவின் Rafael Trujillo (1930-1961). உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டனர். இவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே விசேடமாகக் குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பிரபல்யமான இந்த மிராபெல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 1980 ஆம் ஆண்டு முதல் அந்தத் தினம் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் திகதி கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் திகதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறையானது அவர்களது மனித உரிமைகளின் பாரதூரமான மீறலொன்றாகும். இது உடல்ரீதியானதும், பாலியல்ரீதியானதும், உளவியல்ரீதியானதுமான கெடுதல் அல்லது வன்முறையின் பயமுறுத்தல், பலாத்காரம் அல்லது சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளல் ஆகியனவற்றை உள்ளடக்குவதுடன், பொதுவான அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் இடம்பெறவும் முடியும்.

பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை ஏதாவது தனித்த நாட்டுக்கு அல்லது பிராந்தியத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதுடன், பலதரப்பட்ட சமூக-அரசியல், பொருளாதார, கலாசார, சமய, பழங்குடி மற்றும் இனத்துவ வழக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக பெண்களும், பெண்பிள்ளைகளும் வேறுபட்ட விதத்தில் அனேகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் தான் இது பால்நிலை அடிப்படையிலான வன்முறை என வரையறுக்கப்படுகின்றது.
இங்கு ஒவ்வொரு வயதையும், வகுப்பையும், இனத்துவத்தையும், சமயத்தையும், சாதியையும் மற்றும் அமைவிடத்தையும் சேர்ந்த பெண்களும், பெண்பிள்ளைகளும் பாதிக்கப்படலாம் என்பதுடன், பாதிக்கப்படுகின்றார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறையின் பெருமளவு வகைகள் உள்ளன. அவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: அந்நியோன்யமான துணைவர் மூலமான வன்முறை, பாலியல்வல்லுறவு, திருமணம்சார்ந்த பாலியல்வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை அத்துடன்/அல்லது தொந்தரவு, சீதனம் தொடர்பான வன்முறை, வாழ்க்கைதுணைசாராத வன்முறை, வீட்டு வேலையாட்களுக்கு எதிரான வன்முறை, கேலிசெய்தல், ஆட்கடத்தல் மற்றும் ஆபாசப்புகைப்படம் போன்ற சுரண்டலின் வேறு வடிவங்கள், சமூக வழக்கத்திற்கும், கலாசாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அத்துடன்/அல்லது சமயத்திற்குமான மேற்கோளினால் நியாயப்படுத்தப்பட்டு, கெடுதலை விளைவிக்கும் வழக்கங்களின் காரணமாக பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை இடம்பெறும்.

பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறை ஏதாவது இடத்தில் இடம்பெறலாம். இது வீட்டில்குடும்பத்தில் அல்லது சனசமூகத்தில், வேலை செய்யும் இடத்தில், பொது இடங்களில் மற்றும் போக்குவரத்தில், விசேடமாக இயற்கை அழிவுகளில், உள்நாட்டு மோதலில், யுத்தத்தில் மற்றும் கிளர்ச்சிகள் போன்ற பொது குழப்பங்களின் தருணங்களில் அத்துடன் இச் சூழ்நிலைகளின் காரணமாக உள்ளகரீதியாக இடம்பெயரும் போதும் இடம்பெறலாம்.


பெண்களுக்கு எதிரான வன்முறையினதும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையினதும் முறைமையான வரைவிலக்கணங்களை நாம் அறிவோமானால் பாகுபாட்டின் பிரச்சனையை முனைவுபடுத்துவதன் மூலம் பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறையைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளத்தை பெண்களின் பாகுபாட்டின் சகல வடிவங்களை ஒழித்தல் மீதான சமவாயம் பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் மீதான சமவாயம் [The Convention on the Elimination of All Forms of Discrimination of Women ] (CEDAW)
பெண்களுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட பாகுபாடு: “........... அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, குடியியல் அல்லது ஏதாவது வேறு துறை ஆகியவற்றில் ஆண்களினதும், பெண்களினதும் சமத்துவத்தினதும், மனித உரிமைகளினதும், அடிப்படைச் சுதந்திரங்களினதும் அடிப்படையொன்றின் மீது, அவர்களது திருமணம்சார்ந்த நிலைக்கு அக்கறையின்றி பெண்கள் அங்கீகரிக்கப்படுவதை, மகிழ்ச்சியடைவதை அல்லது பழகிக்கொள்வதை பலவீனப்படுத்தும் அல்லது செல்லாததாக்கும் விளைவை அல்லது நோக்கத்தை கொண்டுள்ள பால்நிலையின் அடிப்படை மீது செய்யப்பட்டுள்ள ஏதாவது வேறுபாடு, தவிர்ப்பு அல்லது கட்டுப்பாடு. எனக்கூறுகின்றது.

பெண்களுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் எதிரான பால்நிலை-அடிப்படையிலான வன்முறையின் அல்லது வன்முறையின் பிரதான வடிவங்கள்
வழமையாக பின்வருமாறு வன்முறை வகைப்படுத்தப்படுகின்றது:

v  உடல்ரீதியான

v  உணர்வுப்பூர்வமான/உளவியல்ரீதியான

v  பாலியல்ரீதியான



v  பொருளாதாரரீதியான (கவர்ந்து கொள்ளல்)

v  தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை
 (இன்டர்நெற், கையடக்கத் தொலைபேசிகள் போன்றன)


மேலும் இந்த வடிவங்களின் ஒட்டு மொத்த வடிவமாக:-
v  வீட்டு/குடும்ப வன்முறை (Domestic/family violence)
v  சமூக வன்முறை (social violence)
v  பாலியல் வன்முறை ( Sexual violence)  எனவும் வகைபடுத்தலாம்.
                                                                                  
 வீட்டு/குடும்ப வன்முறை (Domestic/family violence)

வீட்டில் அல்லது குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளே இந்த வகையில் அடங்கும். பெண்களுக்கு எதிரான வன்முறை மீதான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளரான ராதிகா குமாரசுவாமி குடும்ப வன்முறையைப் பற்றிக் கூறும் போது குடும்பத்தில் பெண்கள் கொண்டிருக்கும் நடிபங்கு காரணமாக அவர்களை இலக்கு வைத்துள்ள அல்லது குடும்ப வட்டத்துக்குள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்கள் மீது தாக்கம் புரிவதை நோக்காகக் கொண்ட குடும்ப வட்டத்துக்குள் புரியப்படும் வன்முறைஎன்றார்.
வீட்டு வன்முறை எனும்போது இங்கு கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் வாக்குவாதங்களின் ஊடாக ஆண் பெண்ணை வன்முறைக்கு உள்ளாக்குகின்றான். மேலும் கணவன் மது அருந்துதல், மனைவி மீதான சந்தேகம், குடும்பப்பிரச்சினை, துணை மீது புரிந்துணர்வு இன்மை, சீதனம், குடும்ப அனுமதியற்ற திருமணம், ஆணாதிக்கம், நிதி ஆண்களிடம் தங்கியிருத்தல், பெண்களுக்கான பாதுகாப்புச்சட்டங்கள் குறைவு போன்ற காரணங்களைக் கூறலாம்.

ஐக்கிய அமெரிக்காவில் 18 நிமிடத்துக்கு ஒருபெண் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றால். இதில் 22% - 35% பெண்கள் பாரிய வன்முறைக்கு இலக்காகி அதிதீவீர சிகிச்சை பெருமளவு உள்ளனர்.
பெரு நாட்டில் பொலிசில் பதிவாகியுள்ள 70% வீட்டு வன்முறைகள் கணவன் மூலமே இடம்பெறுகின்றது.பாகிஸ்தானில் 80% பெண்கள் வீட்டு வன்முறைக்கு இலக்காகின்றனர். இதேநேரத்தில் கென்யாவில் உள்ள பெண்களில் சரி பாதி வீதத்தினர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபோம் கூறியுள்ளது.

சமூக வன்முறை (social violence)

வீட்டில் அல்லது குடும்பத்தில் தொடங்கும் வன்முறைகள் வளர்ச்சி அடைந்து சமூக வன்முறையாக மாற்றுப்பரிமாணம் பெறுகின்றது. சமூகத்தில் பெண் மீதான கட்டுப்பாடு சமுக வன்முறை உருவாக காரணமாகின்றது. சமூகம் ஆணை உயர்வாகவும் பெண்ணை இழிவாகவும் கருதுகின்றது. பெண்சிறுவர்களை புறக்கணித்து கல்வி
, சுகாதாரம், போசாக்கு விடயங்களில் ஆண் பிள்ளைகளுக்கே முன்னுரிமையளிக்கின்றனர். சீதனம் மிகப்பெரிய வன்முறை ஆகும். இது ஆண்வர்கத்தின் நலனுக்கு உருவாக்கப்பட்டாலும் இங்கு பெண்களே நசுக்கப்படுகின்றனர். சீதனம் கேட்டு வற்புறுத்தல், கொலை செய்தல் என்பன ஆசியாவிலேயே அதிகம் இடம்பெறுகின்றது. பங்களாதேசில் சீதனம் கேட்டு மனைவி முகத்தில் அசிட் வீசும் சம்பவங்களும் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுள்ளது.

பால்ய வயதில்திருமணம், பெண்சிசுக்கொலை, சிறுவயதில் தாய்மையடைதல், பெண்ணுக்கு கல்வி மறுக்கப்படல், பலதார மணம், விதவைகளை, மலடான பெண்ணை அபசகுனமாக கருதுதல், உடன்கட்டை ஏற வற்புறுத்தல் என்பன சமூக வன்முறைகளாகும்.

பாலியல் வன்முறை ( Sexual violence)    

பாலியல் வன்முறை என்பது ஒரு பெண்ணுடன் அவரது சம்மதம் இல்லாமல் அல்லது அச்சுறுத்தி
, பலாத்காரம் மூலம் அவளது சம்மதம் பெற்ற பின்னர் அல்லது கணவனிடம் இருந்து சட்ட ரீதியாக பிரிந்து வாழும் போது அல்லது போதைப்பொருள், மதுபானம் அருந்திய பின்னர் நிலையற்ற மனநிலையில் இருக்கும் போது அல்லது 16 வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்ணின் சம்மதமில்லாமல் பாலியல் வல்லுறவு கொள்ளல், ஏதேனும் பாலியல் செயற்பாடுகள், பலாத்காரம், முறையற்ற உடலுறவு என்பன பாலியல் வன்முறை ஆகும்.

பாலியல் வன்முறையில் மிகவும் கீழ்த்தரமானது கற்பழிப்பாகும் இது பெண்களுக்கான ஒரு அச்சுறுத்தல் ஆகும். அமெரிக்காவில் ஒரு மணித்தியாலத்திற்கு 74 பேர் கற்பழிக்கப்படுகின்றனர். 4 பெண்களுக்கு ஒருவர் அங்கு கற்பழிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் 35 நிமிடத்துக்கு ஒருவர் கற்பழிக்கப்படுகின்றனர். அனால் 1-10 முறைப்பாடுகளே போலிசிக்கு வருகின்றது. கற்பழிப்பு தொடர்பில் பல நாடுகளில் சட்டம் பலவீனமானதாக காணப்படுகிறது. கற்பழிப்பானது வீட்டில் குடும்பத்தினரால் கூட ஏற்படலாம். கற்பழிக்கப்பட்ட பெண்ணை சமூகம் ஒரு அவமானமாக கருதுகின்றது. ஆப்ரிக்க நாடுகளில் பல இளம்பெண்களுக்கு கற்பழிப்பு மூலம் AIDS பரவுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இன்று பெண்கள் விபச்சாரதத்திற்காக பெற்றோரால், கணவனால், காதலனால் விற்கப்படுகின்றனர். திருமணசேவை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுகின்றனர். யுத்தங்களின் போதும் பெண்கள் இராணுவ வீரர்களினால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. இன்றைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் டிஜிட்டல் வன்முறை ஒரு புதிய பரிமாணம் ஆகும். கையடக்கத்தொலைபேசி மற்றும் இன்டர்நெட் போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் ஊடாக இழைக்கப்படும் வன்முறை டிஜிட்டல் அல்லது சைபர் வன்முறை எனப்படும். ஆபாச புகைப்படம், பெண்களின் அனுமதியின்றி அவர்களின் பொருத்தமற்ற படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் மேலேற்றுதல், அதனைக்காட்டி பெண்ணை அச்சுறுத்தி பணம் பறித்தல் என்பனவும் இதிலடங்கும்.
சமீபத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் எவை எனச் செய்தி நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது இந்த ஆய்வில் சுகாதாரப் பிரச்சனை, பாலியல் வன்முறை மற்று பாலியல் அல்லாத வன்முறைகள், பண்பாடு மதம் மற்றும் பாரம்பரியத்தின் பேரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளம் சரியாகக் கிடைக்காதது, ஆள் கடத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான ஆறு பிரச்னைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டன.

அதில் ஆப்கானிஸ்தானில் தான் பெண்களுக்கு எதிரான அதிகளவான கொடுமைகள் நடப்பதால், அது பெண்களுக்கான அபாயகரமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் பெண்களின் பயங்கர நிலை குறித்து எடுக்கப்பட்ட மற்றொரு அண்மைய தரவில் ஆப்கானிஸ்தானில் தான் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் கூறப்பட்டிருந்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இரண்டாவதாக ஆப்ரிக்காவின் காங்கோ உள்ளது காங்கோவில் தினமும் பல நூறு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் காங்கோ குடியரசில் வருடத்தில் ஆயிரக்காணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
மூன்றாவதாக பாகிஸ்தான் உள்ளது பாகிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருமளவில் அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்நாட்டின் மனித உரிமை அமைப்பு கடந்த 2010ம் ஆண்டின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குடும்ப மரியாதை என்ற காரணத்தை முன்னிட்டு ஏறத்தாழ 800 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு 8 பேர் என்ற எண்ணிக் கையில் 2,900 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதிலும் பாகிஸ்தானில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பஞ்சாப் மாகாணத்திலே மிக அதிகளவில் 2,600 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகள் கொலை மற்றும் ஆட்கடத்தல் போன்றவற்றால் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2009 இல் சி.பி.ஐ. எடுத்த கணக்கெடுப்பின் படி ஆட்கடத்தலில் 90 சதவீதம் இந்தியாவிற்குள் நடக்கிறது என்றும் நாடுமுழுவதும் 30 லட்சம் பாலியல் பெண் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 40 சதவீதம் பேர் சிறுமிகள் என்பதும் வெளியுலகுக்குத் தெரியவந்தது. உட்படுத்தப்படுகின்றதைப் போலவே இலங்கையிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடும்பம், அரசு, மற்றும் இராணுவம் என வன்முறையின் பரப்பு அகன்று விரிந்துள்ளது. பெண்கள் தமக்கு எதிராக இழைக்கப்படும் அரசியல், இராணுவ கொடூரங்களை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்வுகளை பெறுவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்கத் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

கடந்த 2009 ஆண்டின் கணக்கெடுப்பில் இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 3366 முறைப்பாடுகள் பொலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் பாரதூரமான 773 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாலியல் வல்லுறவு, பெண்கள் கடத்தல், பணிபுரியும் வீடுகளில் வன்முறைகளுக்கு உட்படுத்துதல், காயமேற்படுத்துதல் போன்ற வன்முறைகளே பெண்களு க்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். பொருளாதார ரீதியில் பெண்கள் பலவீனமடைந்துள்ளமையே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென்றும், இதன் காரணமாகவே பெண்கள் இலகுவில் வன்முறைகளு க்கு இலக்காக சாத்தியங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெண்களைப் பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதன் மூலம் இவற்றை தடுக்கமுடியுமென்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின் அதிகாரம் நிறைந்த உலகில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கண் முன்னே நிறைந்து இருந்தாலும் அதைவிட அதிகமான தடைகளும் அவமானங்களும் பெண்களுக்கு உள்ளன. கூடுதலாக ஆண்களின் பெண்ணுரிமை மீறல் ஜனநாயகப் பின்னடைவுக்கு காரணமாவதோடு சமூக அவலங்களுக்கும் பெண்களை இட்டுச்செல்கின்றது. இந்த அவலங்களுக்கு எதிராக பெண்களுடன் சேர்ந்து அரசுகள் போராட வேண்டும். பெண்களையும் குழந்தைகளையும் அரசுகள் பாதுகாப்பதன் மூலமே பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இல்லாது ஒழிக்க முடியும்.

பெண்களுக்குத் தேவையான சமச்சீரான கல்வியை அரசுகள் அளிக்க முன்வரவேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை சமுதாயம் மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான தடைகளை யெல்லாம் தாண்டி பெண்கள் சமுதாயத்தில் முன்னுக்கு வரவேண்டும்.
மனித வளத்துக்காக பெண்கள் செய்யும் தியாகங்களையும் எதிர்காலப் பயன்களையும் கருத்தில் கொண்டு பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க போராட வேண்டும். குறிப்பாக பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறைகள் பெண்களுக்கு ஏற்படாமல் தடுக்கவேண்டும் என அண்மையில் நடந்த சூரிச் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் சுவிஸ் ஜனாதிபதி மிச்சேலின் கள்மி ரே மற்றும் மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நவநீதம்பிள்ளை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் ஆயிரக்காணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் அம் மாநாட்டில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.

மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு ஒரு ஆயுதமாக பெண்கள் மீதான பாலியல் வன்முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த வன்முறைகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சுவிஸ் ஜனாதிபதி கள்மி ரே குறிப்பிட்டார்.
யுகோசுலோவியாவில் போர் நடந்த போது 50 ஆயிரம் பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். காங்கோவில் தினமும் பல நூறு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.

சுவிஸ் ஜனாதிபதி கள்மி ரே அயல்துறை அமைச்சராகவும் உள்ளார். அவர் நவநீதம்பிள்ளை மற்றும் இதர தலைவர்களை பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேச அழைப்பு விடுத்து இருந்தார். சுவிசில் ஒத்துழைப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு மற்றும் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 1 கோடி சுவிஸ் பிராங்க் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதே போன்று ஏனைய நாடுகளும் முன்வர வேண்டும்

No comments:

Post a Comment

Maintained By Techmarketworld